பட்டியக்காடு என்னும் ஆதிவாசிகள் பணிக்களத்தை தெரிந்தெடுக்கவும் அங்கு பணிசெய்யவும் கர்த்தர் உதவி செய்துவருகிறார். மக்கள் மிகவும் விருப்பத்தோடு வசனத்தை ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.
நம் நாடு வளர்ச்சிப்பாதையில் சென்றாலும் பின்தங்கியுள்ள இடங்களும் உள்ளன. இதற்கு சான்று கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பளியர் இன் ஆதிவாசி மக்களாவார். கல்வியறிவுபற்றிய விழிப்புணர்வு குறைவாயிருப்பதினாலும், பள்ளி வீட்டிலிருந்து தொலைவிலிருப்பதினாலும் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வது அரிதாயிருக்கிறது. இவ்வாறு பள்ளிக்குச் செல்லாத பிள்ளைகள் வீட்டு வேலைகளைச் செய்கிறவர்களாகவும், குழந்தை தொழிலாளர்களாகவும் இரு;நது வருகின்றனர்.
இதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 6 பிள்ளைகள் தெரிந்தெடுக்கப்பட்டு, பள்ளியிலே சேர்த்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் வரும் நாட்களில் நல் ஒழுக்கத்துடனும் பக்தியுடனும் கர்த்தருக்கென்று 'எழும்பி பிரகாசிக்க' வேண்டுமென்பதே நமது தரிசனம்.
|